சென்னை, செப்.7-
"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள 1045 ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும்'' என்று அமைச்சர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு பதில் அளித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் பதில் உரை அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம், செயல்படுத்தப்படும் 1081 ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 1,75,456 மாணவ, மாணவிகளும், 296 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 37,640 மாணவ மாணவிகளும் ஆக மொத்தம் 1377 பள்ளிகளில் 2,13,096 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் 1254 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 87,136 மாணவ, மாணவிகளும், 40 பழங்குடியினர் நல விடுதிகளில் 2072 மாணவ, மாணவிகளும், 296 அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் 30,807 மாணவ, மாணவியர்களும், ஆக மொத்தம், 1590 விடுதிகளில், 1,20,015, மாணவ, மாணவிகள் தங்கி படிக்கிறார்கள்.
1045 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
இத்துறையில் மொத்தம் 8587 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 7542 ஆசிரியர்கள் மட்டுமே, பணிபுரிந்து வருகிறார்கள். எஞ்சிய 1045 ஆசிரியர் பணியிடங்கள், தி.மு.க ஆட்சியில், நிரப்பப்படாமல் காலியாக இருந்ததை அறிந்த, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், இந்த ஆண்டே, காலிப் பணியிடங்களை, உடனடியாக நிரப்பிட ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆண்டு 7 ஆதிதிராவிட நல, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8 ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகவும், 3 பழங்குடியினர் நல நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 2 பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் ஆக மொத்தம் 20 பள்ளிகளை தரம் உயர்த்திடவும், ஆணையிட்டுள்ளார்.
thanks: daily thanthi
No comments:
Post a Comment