அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான தகுதியும், திறமையும் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளுக்காக கடந்த 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) உருவாக்கப்பட்டது.
* இந்த ஆசிரியர் தேர்வு வாரியம்தான் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வருகிறது.
* தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. பின்னர்தான் 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.
*1987க்கு பிறகு முதல்வராக கருணாநிதி பொறுப்பில் இருந்தார். அப்போது தான் முதன் முதலாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தார். இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்பட்டது. பட்டதாரிகள் தேர்வு எழுதி நேர்காணலில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றனர்.
*பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
* பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
*அதற்கு பிறகு 1996&2001 வரை முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கினார்.
*அதற்கு பிறகு 2001&2006 வரை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வந்தார். அப்போதும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். பதிலாக ரூ.3000&4000 தொகுப்பு ஊதியத்தின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
*பின்னர் 2006ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பதிவு மூப்பு அடிபடையில் பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அதன்படி 2006&2011 மே மாதம் வரை 55000 ஆசிரியர்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றனர். ஆட்சியின் இறுதியில்கூட 6000 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெறாமல் உள்ளனர்.
*தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2682, பட்டதாரி ஆசிரியர் 5790, இடைநிலை ஆசிரியர் 4342, சிறப்பாசிரியர் 1538, வேளாண் பயிற்றுநர் 25 என மொத்தம் 14377 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். பின்னர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விதி 110ன் கீழ் 13300 பட்டதாரி ஆசிரியர்களும், 16549 பகுதி நேர ஆசிரியர்களையும் நியமிக்கப் போவதாக அறிவித்தார்.
*மேற்கண்ட ஆசிரியர் நியமனங்கள் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமா என்று முதல்வரோ, பள்ளிக் கல்வி அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்தி தெரிவு செய்வதா, அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதா என்பதில் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் �தேர்வு நடத்தியே பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்� என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment